Sunday, 9 March 2008

பண்டிவிரிச்சானில் பக்ச பாசிஸ்டுக்களின் படைநடப்பு முறியடிப்பு


செய்தி மூலம்: புதினம்
மன்னார் முன்நகர்வுகள் முறியடிப்பு: 22 படையினர் பலி- 72 பேர் படுகாயம்
[சனிக்கிழமை, 08 மார்ச் 2008, 07:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னார் பகுதியில் நேற்றும் இன்றும் சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 72 பேர் படுகாயமடைந்துள்ளனர். சேத்துக்குளம்
மன்னார் திருக்கேதீச்சரம் பகுதியில் மாந்தையிலிருந்து சேத்துக்குளம் வழியாக பாப்பாமோட்டை நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மிகச்செறிவாக சகல ஆட்டிலெறி மற்றும் மோட்டார் நிலைகள் தளங்களில் இருந்தும் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களுடனும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களுடனும் டாங்கிகள் பின்தளங்களிலிருந்து செறிவான பீரங்கித் தாக்குதல்களுடனும் சிறிலங்காப் படையினர் நேற்று முற்பகல் பாரிய அளவில் இம் முன்நகர்வை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
4 மணிநேரம் வரை நடத்தப்பட்ட செறிவான முறியடிப்புத்தாக்குதலில் படையினர் மீது செறிவான எறிகணைத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.
இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்கு ஓடிவிட்டனர்.
இன்று மீண்டும் அதே பகுதியில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். இன்று சனிக்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு இந்த முன்நகர்வு மிகச்செறிவான எறிகணை வெடிகணை வீச்சுக்களுடன் டாங்கிகளின் பீரங்கிச் சூடுகளுடனும் சிறிலங்காப் படையினர் நகர்வை மேற்கொண்டனர்.
இன்றைய படை முன்நகர்வும் விடுதலைப் புலிகளின் செறிவான முறியடிப்புத்தாக்குதலின் மூலம் முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.
பிற்பகல் 3:00 மணிவரை நடத்தப்பட்ட இன்றைய முறியடிப்புத் தாக்குலில் சிறிலங்காப் படையினரில் 12 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிக படையினர் காயமடைந்தனர்.
மடு
இதனிடையே நேற்று பண்டிவிரிச்சானிலிருந்து மடுவை நோக்கிய பெருமெடுப்பிலான நகர்வு சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டது. படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்தாக்குதல் நடத்தினர்.
முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கிய மோதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது.
இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 30 படையினர் காயமடைந்தனர்.

No comments: