Friday 5 December, 2008

குமிழமுனையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு

குமிழமுனையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - படையினர் மறுப்பு வீரகேசரி நாளேடு 12/4/2008 10:39:58 PM -

முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக
விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீரர் ஒருவரின் சடலம் உட்பட ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆயினும் குமிழமுனைப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் படையினருக்கு சிறியளவிலேயே சேதங்கள் ஏற்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்ததாவது நேற்று முழுவதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இம்மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் பலம்வாய்ந்த நிலையமொன்று படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் புலி உறுப்பினர்களுக்கு கட்டளையிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட
பதுங்கு குழியொன்று உட்பட மேலும் ஆறு பதுங்கு குழிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை முல்லைத்தீவு, ஆண்டான்குளம் பகுதியிலும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

No comments: