Monday, 18 June 2007

கிழக்கை மீட்க கிளர்ந்தெழுவோம்!


கிழக்கு மாகாண பாதுகாப்பு வலயத்திட்டம் தேசிய உரிமை மீறல்

* இனவெறிப் பாசிச இலங்கை அரசே, கிழக்கு மாகாண உயர்பாதுகாப்பு வலயத் திட்டத்தை உடனே கை விடு!

* இது அபிவிருத்தித் திட்டமோ, குடியேற்றத் திட்டமோ அல்ல, உலக மறு பங்கீட்டிற்கான ஏகாதிபத்திய யுத்தத்திற்கு இராணுவத்தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியே!

* சர்வதேச சமூகம் என முகமூடி தரித்த ஏகாதிபத்தியவாதிகளே,
எல்லைப் புற எஜமானன் - விஸ்தரிப்புவாத இந்தியாவே,
ஐ.நா.சபையே, உலக வர்த்தக நிறுவனமே,
கிழக்கு மாகாண உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் காலடி வைக்காதீர்!

* அதிகாரப் பசியில் அரசியல் சுயநிர்ணயத்தைக் கைவிட்டு, அகசுயநிர்ணய உரிமை பேசிய '' விடுதலைப்புலிகளே'' ,

ஐ.நா.சபைக்கு காவடி எடுக்கும் அடிமைத்தனமான '' கவன ஈர்ப்புப் போராட்டங்களை'' கைவிட்டு,

மேற்கண்ட முழக்கங்களுக்காக உண்மையான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுங்கள்!

No comments: